எம்.எஸ்.தோனி நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பலர் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக்கில் கருத்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.

நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்..

மேலும் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை முக ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply