ஓபிஎஸ்-முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தற்போது அதிருப்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று திடீரென ஓபிஎஸ் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று மதுரையிலிருந்து ஒரே விமானத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் சென்னை சென்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மதுரையிலிருந்து நேற்று இரவு 8:05 மணிக்கு இன்டிகோ விமானத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள்செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்னைக்கு சென்றனர். அதே விமானத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் சென்னை சென்றுள்ளார்.

ஒரே விமானத்தில் சென்றுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் முக ஸ்டாலின் பேசியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறைந்தபட்சம் ஒருவரை ஒருவர் வணங்கி மரியாதை செலுத்தியிருக்கவாவது வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply