ஓபிஎஸ் மகனை வெற்றிபெற சதியா? ஆர்.எஸ். பாரதி புகார்

தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறிய விளக்கமும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனை வெற்றிபெறச்செய்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதா என சந்தேகம் உள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளது

Leave a Reply