ஓபிஎஸ் மகனுக்கு டங்க் ஸ்லிப் ஆகிவிட்டது: அதிமுக முன்னாள் எம்பி
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பேசினார். இதுகுறித்து கருத்து கூறிய அன்வர்ராஜா, ‘முத்தலாக் மசோதா குறித்து ரவீந்திரநாத் குமார் பேசியபோது அவருக்கு டங்க் ஸ்லிப் ஆகிவிட்டதாக கூறினார்.
மேலும் இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், ‘முத்தலாக் மசோதாவில் சில பிரிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரே கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முத்தலாக் மசோதாவை எதிர்த்தும் மக்களவை உறுப்பினர் ஆதரித்தும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.