ஓபிஎஸ்-தீபா திடீர் சந்திப்பு. ஜெ. நினைவிடத்தில் பெரும் பரபரப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, முதல்வராக முடியாத நிலையில் அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற தலைவராக ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் அரைமணி நேரம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து நாட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சற்று முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு மீண்டும் சென்றுள்ளார்.
இதே நினைவிடத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வந்துள்ளார். நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் தீபா சந்திப்பு நடந்ததாகவும், ஓபிஎஸ் அவர்களுக்கு தீபா ஆதரவு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஓபிஎஸ் மற்றும் தீபாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் இந்த சந்திப்பால் தமிழக அரசியலில் என்ன திருப்பம் ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.