ஓட்டு போட வந்த மேனகாவை எதிர்த்து கூச்சல் கோஷம்: பெரும் பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர், மேனகா ஓட்டு போட வந்தபோது பகுஜன் – சமாஜ்வாதி தொண்டர்கள் அவரை எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

அப்போது, மேனகா, ”வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது. வாக்காளர்களை மிரட்டி, ஓட்டு போட விடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது,” என, குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை அவரை எதிர்த்து, பகுஜன் – சமாஜ்வாதி கூட்டணி சார்பில் போட்டியிடும் சோனு சிங் மறுத்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தி, இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.

Leave a Reply