ஓட்டு போடுவதற்கு முன் சிந்தியுங்கள்: விஜய்சேதுபதி அறிவுரை
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு படம் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பர படத்தில் தோன்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கூறியதாவது: நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? இவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடும் முன் தெளிவாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள், முக்கியமாக ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள்’ என்று விஜய்சேதுபதி கூறியுள்ளார்.
இந்த விளம்பர படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்பதும் இந்த விளம்பர படத்தில் நடிகர் விவேக்கும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.