ஓட்டுனர்களை அடுத்து மருத்துவர்கள் போராட்டம்

ஜூன் மாத சம்பளம் தரவில்லை என்பதால் இன்று ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையில் பெரும்பாலான மாநகர பேருந்துகள் ஓடவில்லை. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் தரவேண்டும், பணியிடங்களை குறைக்க கூடாது போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply