ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: உதவி செய்த இரு நர்ஸ்கள்
ஓடும் ரயிலில் எந்தவித மருத்துவர்கள் உதவியின்றி, மருத்துவ உபகரணங்கள் இன்றி இரண்டு நர்ஸ்கள் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அந்த இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
சமீபத்தில் யஷ்வந்த்பூர் மற்றும் பிதார் இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது
இந்த நிலையில் அதே ரயிலில் பயணம் செய்த இரண்டு நர்ஸ்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முன்வந்தனர். டாய்லெட் அருகே உள்ள இடத்தையே ஆபரேசன் தியேட்டராக மாற்றிய நர்ஸ்களுக்கு அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெட்ஷீட்டுக்கள் மற்றும் தண்ணீர் கொடுத்து உதவினர். இருவரும் எந்தவித சிரமமும் இன்றி அந்த் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவதோடு, அந்த இரு நர்ஸ்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.