shadow

ஒரே மேடையில் மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ்

மார்ச் 1ல் கன்னியாகுமரில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி வரும் 1ஆம் தேதி குமரியில் நடைபெறும் பிரமாண்டமான கூட்டதில் பேசவுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி என்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என இன்னமும் நம்பிக்கை உள்ளதாகவும், தேமுதிக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply