shadow

ஒரே நேரத்தில் வாக்களிக்கும் 154 நரேந்திர மோடிக்கள்; கலகலப்பூட்டும் குஜராத் தேர்தல்!

விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில், நரேந்திர மோடி பெயரில் உள்ள 154 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 18ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதில் பிரதமர் நரேந்திர மோடி ரனிப் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்ய உள்ளார். ஆனால் ஒரு நரேந்திர மோடி அல்ல; 154 நரேந்திர மோடிக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதாவது பிரதமர் மோடி பெயர் கொண்ட நபர்கள் ஏராளமாக குஜராத் மாநிலத்தில் உள்ளனர்.

அகமதாபாத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 49 பேர், நரேந்திர மோடியின் பெயரைக் கொண்டுள்ளனர். அதே மாவட்டத்தில் தான் பிரதமர் மோடிக்கும் ஓட்டுரிமை உள்ளது.

இதையடுத்து மெஹ்சானா மாவட்டத்தில் 24 பேரும், பருச்சில் 16, சூரத்தில் 15 பேரும் உள்ளனர். பதானில் 13, பனஸ்கந்தாவில் 11, சபர்கந்தாவில் 7, காந்திநகரில் 6, பரோடாவில் 6 பேரும் மோடி பெயரில் வாக்களிக்கின்றனர்.

Leave a Reply