ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா?
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
இந்த நிலையில் தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வடதமிழகம் – தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.