ஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்
சீன அதிபரின் இந்திய வருகையால் ஒரே நாளில் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றது. மாமல்லபுரம் என்ற ஒரு பழங்கால சிற்பக்கலையில் சிறந்த நகரம் இருப்பது உலகின் பெரும்பாலானோர்களுக்கு தெரியாத நிலையில் சீன அதிபர் மாமல்லபுரம் வருகை தந்த தினத்தில் 14 மில்லியன் பேர் கூகுளில் மாமல்லபுரத்தை தேடியுள்ளனர்.
இந்த ஆச்சரிய தகவல் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் மாமல்லபுரத்திற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் எந்தவித செலவும் இன்றி சீன அதிபர் ஒரே நாளில் மாமல்லபுரத்தை உலகம் முழுவதும் புகழ் பெற செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.