ஒரே சிறையில் நீரவ் மோடி – விஜய் மல்லையா? லண்டன் கோர்ட் கேள்வி

இந்திய வங்கிகளில் பலகோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்கள் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்

இந்த நிலையில் மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீரவ் மோடியின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என நீதிபதி இந்தியா சார்பில் வாதாடிய வக்கீலிடம் கேட்டார்.

Leave a Reply