ஒரே ஒரு கொரோனா நோயாளி வந்ததால் இழுத்து மூடப்பட்ட வங்கி மற்றும் ஏடிஎம்: அதிர்ச்சி தகவல்

நாமக்கல் அருகே கொ0ரோனா தோற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் வங்கி மற்றும் ஏடிஎம் சென்றதை அடுத்து அந்த வங்கியின் ஏடிஎம் இழுத்து மூடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் ஒரு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் ஏடிஎம் சென்றது தெரியவந்தது

இதனை அடுத்து அந்த வங்கி மற்றும் ஏடிஎம் ஆகிய இரண்டையும் இழுத்து மூடிய அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வேறொரு கிளைக்கு சென்று அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது

Leave a Reply