ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விற்பனைக்கு அல்ல: பிரபல நடிகை ஆவேசம்
நடிகைகள் பதிவு செய்யும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ஒருசில சபல எண்ணம் கொண்டவர்கள் இணையம் மூலம் ஆபாச அழைப்பு விடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் சரண் இயக்கிய ‘ஆயிரத்தில் இருவர்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை சாக்சி சவுத்ரி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தார். இந்த வீடியோ, புகைப்படங்களை பார்த்து தனக்கு ஒரு நபர் ஆபாச அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்காக அவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியுள்ளதாகவும் நாடிகை சாக்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற அழைப்பை விடுத்தவர்கள் முட்டாள்கள் என்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விற்பனைக்கு அல்ல’ என்றும் அவர் ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.