வனிதா அதிர்ச்சி தகவல்
வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் முடிந்து இன்னும் முழுதாக ஒரு நாள் கூட முடியவில்லை அதற்குள் பீட்டரின் முதல் மனைவி தனக்கு விவாகரத்து கொடுக்காமல் பீட்டர் பால் மறுமணம் செய்து கொண்டதாக சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வனிதா பீட்டரின் முதல் மனைவி நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக வனிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அளவுக்கு பணம் கொடுக்க தங்களிடம் பணம் இல்லை என்றும் இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்
பீட்டரின் முதல் மனைவி ஒரு கோடி ரூபாய் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.