shadow

ஒரு இலை பழனிச்சாமி, இன்னொரு இலை ஓபிஎஸ்: அமைச்சர் உதயகுமார்

அதிமுகவின் இரண்டு அணிகளாக இருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோதிலும், மனங்கள் இணையவில்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் கூறிய கருத்து அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இரட்டை இலை கிடைத்த பின்னர் முதல்வரின் போக்கில் மாறுபாடு தெரிவதாகவும், அவர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உதாசீனப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவை பொருத்தவரை ஒரு இலை முதல்வர் பழனிச்சாமி என்றால், இன்னொரு இலை துணை முதல்வர் ஓபிஎஸ் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

`அ.தி.மு.க-வில் ஒரு இலை எடப்பாடி பழனிசாமி, மற்றொரு இலை ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம்; ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம். எங்களுக்குள் எந்த இடைவெளியிலும் இல்லை. அதனை யாரும் ஏற்படுத்தவும் முடியாது. முப்பெரும் விழாவிற்கு அழைப்பிதழ் ஏதும் அச்சடிக்கப்படவில்லை. ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்’ என்று பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply