ஒரு இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து கேப்டன் விராத் கோஹ்லியின் இரட்டை சதம், முரளி விஜய், புஜாரே மற்றும் ரோஹித் சர்மாவின் சதங்கள் ஆகியவற்றின் உதவியால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி இலங்கை அணி வெறும் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா, ஜடேஜா, யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.