நேற்று நடைபெற்ற இரண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முதலாவதாக நடந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா 163 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது இந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற்றது
அதன் பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியான மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா 176 ரன்கள் எடுத்தன இதனை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டதில் மீண்டும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்பட்டது
இரண்டாவதாக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 11 ரன்கள் அடித்தது அதன் பின்னர் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இந்த வெற்றியை அடுத்து பஞ்சாப் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் சென்னை அணி ஏழாவது இடத்திலும் ராஜஸ்தான் அணி எட்டாவது இடத்திற்கும் தள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.