ஒத்தி வைக்கப்பட்ட ஓபிஎஸ் வழக்கு: அதிமுகவுக்கு தற்காலிக நிம்மதி
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை அடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் ஒருசில ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனால் அதிமுகவுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கை ஒத்திவைக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு, தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து ஒத்திவைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.