shadow

ஐ.எஸ்.எல் கால்பந்து: சொந்த மண்ணில் மும்பை அணிக்கு கிடைத்த அதிர்ச்சி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் மும்பை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. சொந்த மண்ணான மும்பையில் இந்த போட்டி நடந்ததால் ரசிகர்களின் ஆதரவுடன் மும்பை அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது.

ஆனால் முதல் பாதியில் ஒரு கோல், இரண்டாவது பாதியில் ஒரு கோல் என ஜாம்ஷெட்பூர் அணி அசத்த, மும்பை அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. எனவே மும்பை அணி 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

மும்பை, ஜாம்ஷெட்பூர், ஐ.எஸ்.எல் கால்பந்து, கோல்,

Leave a Reply