ஐஸ்க்ரீம் வாங்க வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது திமுக தொண்டர்
சென்னை வியாசர்பாடியில் உள்ள அன்னை சத்தியா நகர் 3வது தெருவை சேர்ந்த 60 வயதான திமுக தொண்டர் ஒருவர் அதே பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு, அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க நேற்று வந்துள்ளார். அப்பொழுது 60 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முதியவரின் செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறி கூச்சலிட்டதால் அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் சிறுமியை மீட்டதுடன், முதியவரை சராமாரியாக அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.