ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங் நடைபெற்று வருவது ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் போலீசார் நேற்று திடீரென சோதனை செய்ததில் ஐபிஎல் பெட்டிங் செய்த நான்கு பேர்களை கைது செய்தனர்
அவர்களிடமிருந்து ரூபாய் 4 கோடி மதிப்புள்ள ரொக்கம், 19 மொபைல் போன்கள், 2 ரூபாய் எண்ணூம் கவுண்டிங் மெஷின் ஆகியவை கைப்பற்றப்பட்டது
ஐபிஎல் போட்டிகளில் ஒரே நாளில் ஒரே இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாடு முழுவதும் பல இடங்களில் ஐபிஎல் பெட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர்களை பிடிக்க காவல்துறையினரிடம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.