ஐந்தே நிமிடங்களில் பொங்கல் ரயில் டிக்கெட் காலி! அதிர்ச்சியில் பயணிகள்

பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று காலை முன்பதிவு தொடங்கிய நிலையில் ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு டிக்கெட்டுக்கள் ஐந்தே நிமிடங்களில் தென்மாவட்ட ரயில்கள் அனைத்தின் டிக்கெட்டுக்களும் காலியாகிவிட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு செப்.15ம் தேதியும் தொடங்குகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின் சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதிக்கான முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்குகிறது.

Leave a Reply