ஐட்டம் எனக் கூறிய போதை இளைஞரை போட்டு தள்ளிய இளம்பெண்
மும்பை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் இரவில் பணி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, போதை இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசமாக பேசியது மட்டுமின்றி ‘நீ ஒரு ஐட்டம் தானே’ என்று தரக்குறைவாக பேசினார்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இளைஞரை பின்தொடர்ந்து சென்று அவரது வீட்டை கண்டுபிடித்து, பின்னர் தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் போன் செய்து வரவழைத்தார். அவர்கள் அனைவரும் வந்த பிறகு அந்த இளைஞரை கூப்பிட்டு நையப்புடைத்த அந்த இளம் பெண், அதன்பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
காவல் நிலைய விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் தினேஷ் என்றும் தினந்தோறும் போதையில் அந்த சாலை வழியாக வரும் பெண்களை கிண்டல் செய்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.