shadow

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: தோனியின் சென்னை அணிக்கு முதல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4 வது சீசன் கொச்சியில் கடந்த 17 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதலாக இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி உரிமையாளராக இருக்கும் சென்னை அணியை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 2 கோல்களை அடித்து சென்னை அணி தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் மற்றுமொரு கோலை அடித்து வெற்றியை உறுதிசெய்தது

கடைசிவரை நார்த் ஈஸ்ட் அணி கோல்கள் எதுவும் அடிக்காததால் 3-0 என்றக் கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த ஆண்டு தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Leave a Reply