ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் குவிந்த திரையுலகினர்
‘சர்கார்’ படப்பிரச்சனை தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று கைது செய்யப்படுவார் என வதந்தி பரவியதை அடுத்து முருகதாஸின் வீட்டின் முன் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் அவரது வீட்டின் முன் குவிந்த நிலையில் திரையுலகை சேர்ந்த ஒருசிலரும் முருகதாஸ் வீட்டிற்கு சென்று வந்தனர்.
அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன், ரமேஷ் கண்ணா மற்றும் முருகதாஸ் வழக்கறிஞர்கள் சிலர் சென்றனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் யாரும் இல்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் சர்கார் பிரச்சனை குறித்து கருத்து எதுவும் சொல்ல அவர்கள் மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.