ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யும் ஏழு வயது சிறுமி
கல்வி அறிவு பெற முடியாத ஏழை குழந்தைகளுக்கு அரசு, தனியார் அமைப்புகள், பெரிய பணக்காரர்கள் உதவி செய்வதை நாம் அடிக்கடி பார்த்திருக்கின்றோம்
ஆனால் ஏழு வயது சிறுமி ஒருவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு கொடுத்து உதவி செய்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஓஇஎஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் ஏழு வயது சிறுமி சஞ்சனா போஸ்லே. இவர் இந்த வயதிலேயே அபாரமாக பெயிண்டிங் வரையும் திறமை பெற்றவர். இவர் தான் வரைந்த பெயிண்டிங்கில் கிடைக்கும் மொத்த பணத்தையும் ஏழைக்குழந்தைகள் கல்விக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.