shadow

ஏழு ஹீரோயின்களுடன் உருவாகும் மிரண்டவன்.

prajan-mirandavan
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது பிரஜின் என்பவரும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

பிரஜின் தற்போது முரளியின் இயக்கத்தில் மிரண்டவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏழு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவள் பெயர் தமிழரசி, அஜீத்தின் வீரம் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த மனோசித்ரா மற்றும் சருணா, அஞ்சு கெளடா, ஸ்வாதி சவேரா, ஐஸ்வர்யா மற்றும் ஜென்சி ஆகியோர் இந்த படத்தின் ஹீரோயின்கள் ஆவர்.

இது ஒரு ரொமாண்டிக், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகி வருவதாகவும், பிளாக்மெயில்தான் இந்த படத்தின் முக்கிய அம்சம் என்றும் படத்தின் இயக்குனர் முரளி கூறியுள்ளார். தான் உண்மையிலேயே பார்த்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் படத்தின் இறுதியில் இதுவரை யாரும் கூறாத ஒரு மெசேஜ் கூறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஏழு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்தாலும் அனைவருக்கும் சமமான கேரக்டர்களை உருவாக்கியிருப்பதாகவும், அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் பிரஜின் நடித்த மணல் நகரம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இ. என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply