ஏற்காடு மலையடிவாரத்தில் பயங்கர தீவிபத்து: போக்குவரத்து மாற்றம்
ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் பற்றி எரியும் தீயால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் குப்பனுர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
குருவம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.