shadow

எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் -சேக்ஸ்பியர் லிவ்ஸ் 2016 நிகழ்ச்சி

siet சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் -சேக்ஸ்பியர் லிவ்ஸ் 2016- என்ற நிகழ்ச்சி வருகிற 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தொடங்கி வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கல்லூரியின் நிர்வாகி பாத்திமாபானு, பேராசிரியை எல்டெய்ல், நிகழ்ச்சிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஆங்கில மொழி ஆசிரியர் சங்க செயலர் இளங்கோ ஆகியோர் அளித்த பேட்டி:

சேக்ஸ்பியரின் 400-ஆவது நினைவு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது கல்லூரியும், ஆங்கில மொழி ஆசிரியர் கழகத்தின் இந்திய அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் 37 அரங்குகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி இடம்பெற உள்ளது. அது தவிர பயிரங்குகள், கருத்தரங்குகள், வினாடி வினா போட்டிகள், விவாதங்கள் நடைபெற உள்ளன.

நாடு முழுவதிலும் இருந்து 25 கல்லூரிகள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம் என்றனர்.

Leave a Reply