எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக நட்சத்திரங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என்று கூறியுள்ளார்.

 

Kamal hassan tweet for “SPB

Leave a Reply