shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள், வங்கிகள் என பல துறை சார்ந்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன.

சில மோசடி கும்பல்கள் வேலை தேடுவோரை ஏமாற்றி வருகின்ற மோசமான சம்பவங்களும் நடக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கே புகார்கள் குவிந்துள்ளன.

எஸ்பிஐ பேரில் போலியாக வழங்கப்படும் appointment letter குறித்து வேலை தேடுவோருக்கு எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

வேலைவாய்ப்பு, இண்டர்வியூ, இறுதி ரிசல்ட் உள்ளிட்ட விவரங்களை //www.sbi.co.in/web/careers , //bank.sbi/web/careers ஆகிய இணையதளங்களில் மட்டும் பார்த்து தெரிந்துகொள்ளும்படி எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.