shadow

எம்ஜிஆர் மறைந்த இரவில் திருநாவுக்கரசர் என்ன செய்தா? திடுக்கிடும் தகவல்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களுக்கும் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே கருத்துவேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது திருநாவுக்கரசர் குறித்து இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ள ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர் என்றும், இளங்கோவன் மீது இனி மேலும் தரமற்ற விமர்சனங்களை அவர் செய்தால் இவர் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த போதும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களையும் எல்லாம் வெளியிட நேரிடும் என்று இளங்கோவன் ஆதரவாளர் கூறியுள்ளார்.

 

Leave a Reply