என்.டி.திவாரி மகன் ரோகித் கொலை வழக்கில் மனைவி அபூர்வா கைது
உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மகன் ரோகித் சேகர் கொலை வழக்கில் மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மரணம் அடைந்த ரோகித்தும் அவர் மனைவி அபூர்வாவும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக, ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்துள்ளதாகவும், கொலை நடந்த அன்று, ரோகித்துக்கு அபூர்வாவிடம் இருந்து வீடியோ கால் வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ரோகித் மனைவி அபூர்வாவிடம் போலீசார் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.