shadow

என்ன தர்மம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்

2நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன்படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
என்ன தர்மம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்! நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம். நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.

நோய் மட்டுமல்ல பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்திசாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.

தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன்படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும். ஆக என்ன செய்தால் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம்!

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலைமுறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே:

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் – 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் – 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் – 5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் – 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது – 6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் – 7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் – 9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது – 14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் – 21 தலைமுறைக்கு.

Leave a Reply