என்னை விட்டு அவளை எப்படி காதலிக்கலாம்? கத்தியுடன் வந்த 14 வயது மாணவி
தன்னை காதலிக்காமல் தன்னுடன் படிக்கும் இன்னொரு மாணவியை, மாணவன் ஒருவன் காதலித்ததால் ஆத்திரமடைந்த 14 வயது மாணவி ஒருவர் அவரைக் கொல்ல கத்தியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் இருக்கிறது ஹில்டன் ஹெட் தீவு பகுதியில் இயங்கி வரும் ஒரு பள்ளியில், மாணவி ஒருவர் படித்து வந்தார். அவரது புத்தகப் பைக்குள் இரண்டு கத்திகள் இருந்தன. இதுபற்றி மற்றொரு மாணவி, ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர், மாணவியின் பைக்குள் இருந்த 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது, உடன் படிக்கும் மாணவன் வேறொரு பெண்ணை விரும்புவதால், அவனைக் குத்துவதற்காக இந்த கத்திகளை கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். முந்தைய நாள் இரவே கிச்சனில் இருந்து எடுத்து வைத்துக்கொண்ட தாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.