shadow

என்னையும் ரஜினியையும் சேரவிடாமல் தடுத்துவிட்டனர். கவுதம் மேனன் புலம்பல்

‘கபாலி’ படத்திற்கு முன்பே தனது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் யாரோ ஒருவர் என்னையும் ரஜினியையும் சேர விடாமல் தடுத்துவிட்டதாகவும் இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினியிடம் தான் முதலில் கூறினேன்.. தயாரிப்பாளர் தாணு தான் ரஜினியிடம் கூட்டி சென்றார். காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும்’ என்று ரஜினி கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோ‌ஷமாக என்னை அனுப்பி வைத்தார் தாணு.

நானும் என் குழுவினருடன் அமர்ந்து எப்படிப் பண்ணலாம் என்று உடனே திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். மாலையில் தாணு சார் போனில் ‘இல்லை… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது. நான் ரஞ்சித்தை வைத்து பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்க என்று எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். ரஜினியை கவுதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார்? என்ற கேள்வி பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply