அமைச்சர் செல்லூர் ராஜூ

என்னால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என அமைச்சர் செல்லூர் கே.ராஜு அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட நான் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் என் வயது 50 யை தாண்டியதால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை

என் உயிரை பற்றி நான் என்றுமே கவலைப்பட்டது கிடையாது, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும்

கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் மருத்துவமனை செல்வதால் இறப்பு ஏற்படுகிறது, தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை, கொரோனாவில் மட்டுமே யாரும் இறக்கவில்லை, இணை நோய்களால் இறப்பு ஏற்படுகிறது. கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம்’ இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்

Leave a Reply