என்கிட்ட ஒரு வார்த்தை ரஜினி கேட்டிருக்கலாம்: ப.சிதம்பரம்
சிஐஏ மற்றும் என்.ஆர்.சி ஆகிய சட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்பாக ஒரு வார்த்தை ரஜினி என்னிடம் கேட்டிருந்தால் அந்த சட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் விளைவுகள் குறித்து அவரிடம் நான் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பேன் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி ஆகிய சட்டங்கள் அவசியம் தேவை என்றும் அதற்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக குரல் கொடுப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்
ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பற்றி திரு ரஜினி அவர்கள் தெரிவித்த கருத்து ஏமாற்றமளித்தது
என்னிடம் கருத்துக் கேட்டிருந்தால், அந்தச்
சட்டம் அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவுக்கு முரணானது என்பதை விளக்கியிருப்பேன்— P. Chidambaram (@PChidambaram_IN) February 5, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.