பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தனது நண்பர் என்று கூறியுள்ளார்

நேற்று ஐநா சபை கூட்டம் ஆன்லைனில் நடந்த நிலையில் அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் உரையாடினார் நண்பர் மஹிந்த ராஜபக்ஷவுடன் உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

அதுவும் இந்த டுவிட்டை அவர் தமிழில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்சேவை தனது நண்பர் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply