எனது சொத்துக்களை தர தயார், திருநாவுக்கரசர் தர தயாரா? – பொன்.ராதாகிருஷ்ணன்

குடிநீர் பிரச்சனையை தீர்க்க திமுக கூட்டணியின் 37 எம்பிக்களும் தங்கள் சொத்துக்களை விற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘முதலில் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொத்துக்களை கொடுத்து முன்னுதாரணமாக செய்யட்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ‘குடிநீர் பிரச்சனையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார், திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சொத்துக்களை எழுதி தர தயாரா? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தே தீரும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி கூறியுள்ளார்.

Leave a Reply