எச்.ராஜா போட்டியிடும் சாரணர் தேர்தலில் திடீர் மோதல்
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னையில் நடந்து வருகிறது. சாரணர் அமைப்பை சார்ந்தவர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் அவரை எதிர்த்து பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர்பி.மணியும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவுகள் சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென எச்.ராஜா தரப்பினர் எதிர்த்தரப்பிடம் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் தலைவர் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.