எச்சரிக்கை வேண்டாம், கருத்துக்களை மட்டும் கூறுங்கள்: வைகோவுக்கு வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்.
கருத்துக்களை மட்டும் கூறுங்கள், எச்சரிக்கை எல்லாம் கொடுக்க வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவர் பேசிய முதல் பேச்சில் அரசுக்கு சில எச்சரிக்கைகள் விடுத்தார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு, எச்சரிக்கை வேண்டாம், கருத்துக்களை மட்டும் கூறுங்கள் என வைகோவுக்கு அறிவுறுத்தினார்
Leave a Reply
You must be logged in to post a comment.