shadow

எங்க சிங்கம் இங்க இருக்குடா? தலைமறைவு என கூறப்பட்ட எச்.ராஜா ஆதரவாளர்கள் ஆவேசம்

நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில் நேற்று அவர் வேடசந்தூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய பாஜக மற்றும் எச்.ராஜா ஆதரவாளர் ஒருவர், ‘எச் ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா. உன் கண்ணுக்கு தெரியுதா. இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல் எச் ராஜாதான். அவர் சிங்கம் மாதிரி இங்க உட்காந்திருக்காரு, தலைமறைவுனு போட்டு இருக்கீங்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்க இருக்கோம். எங்கள் உயிர்களை தாண்டிதான் உங்களால் எச் ராஜாவை கைது செய்ய முடியும் என்று பேசினார்.

இந்த நிலைய்யில் எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு குறித்து தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிமன்றம், அவர் 4 வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

Leave a Reply