திடீரென ஃபேஷன் ஆனதால் பரபரப்பு
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கும்போது அவர் அணிந்திருந்த காமிச்சா என்ற உடை திடீரென நாடு முழுவதும் ஃபேஷன் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் அணிந்த அதே உடையை போல் தயாரிக்கும் பணியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷாவ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்
இந்த உடை தான் தயாரித்த உடன் அதிக அளவில் டிமாண்ட் இருந்ததாகவும் அதனால் இந்த உடையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு உரையின்போது பிரதமர் அணிந்த உடை மீது பலரும் அறிய ஆர்வம் காட்டியதால் இதே போன்ற உடை வேண்டும் என்று பலர் கேட்டதால் இந்த உடையை தாங்கள் தயாரித்து வருகின்றோம் என்று நெசவாளர்கள் கூறுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.