shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தேவையான உதவி செய்ய 24 மணி நேர ஹெல்ப் டெஸ்க் ஒன்றை சென்னை காவல்துறை ஆரம்பித்துள்ளது

இதன்மூலம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 14 நாட்களிலும் தனியாக இருப்பவர்கள், தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல் நலம் இல்லாமல் இருப்பவர்கள் எந்தவித உதவியும் கேட்கலாம் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பெறுதல், ஆக்சிஜன் சிலிண்டரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்தல் உள்பட எந்த உதவி என்றாலும் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

24 மணி நேரமும் இந்த ஹெல்ப்டெஸ்க் இயங்கும் என்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளும்படி சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9498181236 மற்றும் 9498181239

Leave a Reply