உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்து வரும் 29 வயது கரோலின் நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெறவிருப்பதாக கரோலின் அறிவித்துள்ளார்.
இந்த தகவலை கரோலின் தனது இன்ஸ்ட்ராம்கிராம் சமூக வலைதளத்தில் பதிவு செய்து தனது ஓய்வை அவர் உறுதி செய்துளார். டென்னிஸ் உலகில் கரோலின் பல சாதனைகள் செய்த நிலையில் கடைசி தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்த போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.