shadow

உலகின் ஆற்றல் மிக்க பெண்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

19ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள பார்ச்சூன் என்றா பத்திரிகை ஆற்றல்மிக்க பெண்கள் குறித்த பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டிற்கான ஆற்றல் மிகுந்த 50 பெண்மணிகள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் பேங்கோ சான்டான்டர் நிறுவன தலைவர் அனா போடின் முதலிடத்திலும் இந்திய அரசு நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ள சந்தா கோச்சார் ஐந்தாவது இடத்திலும், ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷிகா சர்மா 19வது இடத்திலும் உள்ளார்

மேலும் இந்த பட்டியலில் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் குரூப் செயலாளர் சூவா சாக் குங் நான்காவது இடத்தில் இருக்கிறார். ஓர்நெல்லா பார்ரா (10), லாங்பார் வூ யாசூன் (26), ரெய்ச்சல் டுவான் (35), சன் ய பங் (38), அன் கெய்ன்ஸ் (44), ஆலிசன் வாட்கின்ஸ் (47) ஆகிய பெண்மணிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply